அதிமுக எம்.எல்.ஏ எஸ்எஸ்.சரவணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இந்த கொரோனா பாதிப்பால் பெரும்பாலும் தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் அதிகமாக பாதக்கப்படுகின்றனர். இதனிடையே நலத்திட்ட உதவிகள், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி என பல பணிகளில் ஈடுபட்டு வரும் அரசியல் பிரமுகர்களுக்கும் கொரோனா பரவி வருகிறது. நேற்று காலை மதுரை மாவட்டம் சோழவந்தான் அதிமுக எம்எல்ஏவான மாணிக்கத்திற்கும், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகனுக்கு கொரோனா உறுதியானது. இதனால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இன்று காலை குளித்தலை எம்எல்ஏ ராமருக்கு கொரோனா உறுதியானது. இந்த நிலையில் மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.எஸ் சரவணனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் 31 சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.