பூம்புகார் அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ்க்கு கொரோனா உறுதி!

 

பூம்புகார் அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ்க்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக சென்னையில் பாதிப்பு குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பூம்புகார் அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ்க்கு கொரோனா உறுதி!

இதனிடையே அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. குறிப்பாக மக்களுக்கு நிவாரணம் வழங்கிய திமுக எல்எல்ஏக்களுக்கும், அதிமுக எம்எல்ஏக்களுக்கும், அமைச்சர்களுக்கும் கொரோனா உறுதியாகி வருகிறது. இருப்பினும் பலர் அதிலிருந்து குணமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் பூம்புகார் அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ்க்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மயிலாடுதுறை எம்.பி ராமலிங்கத்துக்கு கொரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.