செய்யாறு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி!

 

செய்யாறு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி!

செய்யாறு தொகுதி அதிமுக எம்எல்ஏ தூசி மோகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

ஆண்டுக்கு இருமுறை கூட்டப்படும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்.14 ஆம் தேதி தொடங்க உள்ளது. வழக்கமாக கோட்டையில் நடைபெறும் கூட்டத்தொடர், முதன்முறையாக இட நெருக்கடி மற்றும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை சேப்பாக்கத்தில் இருக்கும் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. அதே போல, கொரோனாவால் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மட்டுமே நடைபெற உள்ளது.

செய்யாறு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி!

இதனிடையே கூட்டத்தொடரில் பங்கேற்க உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முதல்வர் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என சட்டப்பேரவை செயலாளர் உத்தரவிட்டதன் பேரில், அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செய்யாறு தொகுதி அதிமுக எம்எல்ஏ தூசி மோகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.