இளம்பெண்களை மிரட்டி ஆபாசப்படம் எடுத்து மிரட்டிய 3 பேரில் ஒருவருக்கு கொரோனா… சேலத்தில் பரபரப்பு!

 

இளம்பெண்களை மிரட்டி ஆபாசப்படம் எடுத்து மிரட்டிய 3 பேரில் ஒருவருக்கு கொரோனா… சேலத்தில் பரபரப்பு!

சேலம் மாநகர எல்லைக்கு உட்பட்ட தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரும் இவரின் நண்பர்கள் சிலரும் சேர்ந்துகொண்டு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வறுமையில் வாடும் பெண்கள், கணவனை இழந்தவர்கள் போன்ற பெண்களை குறிவைத்து அவர்களுக்கு பண ஆசையை காட்டி பாலியல் தொழிலில் ஈடுப்படுத்த முயன்றுள்ளனர்.

இளம்பெண்களை மிரட்டி ஆபாசப்படம் எடுத்து மிரட்டிய 3 பேரில் ஒருவருக்கு கொரோனா… சேலத்தில் பரபரப்பு!

மேலும் இவர்களின் ஆபாச படங்களை எடுத்து மிரட்டி வந்த இந்த கும்பல் இந்த பெண்களை வைத்து சில தொழிலதிபர்களையும் வலையில் வீழ்த்தி ஆபாசமாக படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக எழுந்த வழக்கில் இன்று காலை பிரதீப், சிவா மற்றும் லோகநாதன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இளம்பெண்களை மிரட்டி ஆபாசப்படம் எடுத்து மிரட்டிய 3 பேரில் ஒருவருக்கு கொரோனா… சேலத்தில் பரபரப்பு!

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் லோகநாதனுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், சேலம் நகர அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 25 பேரை தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளனர்.