திருவாரூரில் செய்தியாளர் உட்பட 6 பேருக்கு கொரோனா உறுதி.. பீதியில் மக்கள்!

 

திருவாரூரில் செய்தியாளர் உட்பட 6 பேருக்கு கொரோனா உறுதி.. பீதியில் மக்கள்!

தமிழகத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் கொரோனா பாதிப்பு பரவியுள்ளது. குறிப்பாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கும ஊடகத்துறையினருக்கும் கொரோனா பரவி வருகிறது. இதுவரை திருப்பூர் மாவட்டம் முழுவதும் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு பரவிய நிலையில் 42 பேர் பூரண குணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் செய்தியாளர் உட்பட 6 பேருக்கு கொரோனா உறுதி.. பீதியில் மக்கள்!

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமாக 1 செய்தியாளர் உட்பட 6 பேருக்கு கொரோனா பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வருபவருக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 4 பேருக்கும் ஒரு ஓ.என்.ஜி.சி ஊழியருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட 6 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.