புழல் சிறையில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி!

 

புழல் சிறையில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இருந்து மக்களை காக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னை புழல் சிறையில் இருந்து திருச்சி சிறைக்கு சென்ற கைதிக்கு கொரோனா இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து புழல் சிறையில் இருந்து கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை ஆகிய சிறைகளுக்கு சென்ற 4 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

புழல் சிறையில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி!

அதனால் மற்ற கைதிகளுக்கும் கொரோனா பரவியிருக்குமோ என்ற அச்சத்தில் முதற்கட்டமாக கைதிகள் மற்றும் சிறைக்காலவர்கள் என 90க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மொத்தம் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருந்தது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து கொரோனா பரிசோதனை தொடர்ந்தது. இதனிடையே புழல் சிறையில் பாதிப்பு அதிகம் ஆனதால், அங்கு கொரோனா வார்டு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், புழல் சிறையில் சிறைக்காவலர், கைதி என இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சிறையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.