2 டோஸ் தடுப்பூசி போட்டும் அரசு செவிலியர் பலி!

 

2 டோஸ் தடுப்பூசி போட்டும் அரசு செவிலியர் பலி!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவிலியர் சாமுண்டீஸ்வரி கொரோனாவால் பலியானார்.

2 டோஸ் தடுப்பூசி போட்டும் அரசு செவிலியர் பலி!

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் இறப்பு எண்ணிக்கையும் கூடி வருகிறது. இந்நிலையில் சென்னை தியாகராயநகர் பகுதியை சேர்ந்தவர் செவிலியர் சாமுண்டீஸ்வரி. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய வந்த இவர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 4 நாட்களாக ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

2 டோஸ் தடுப்பூசி போட்டும் அரசு செவிலியர் பலி!

இவர் கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டதுடன், இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளார். இருப்பினும் செவிலியர் சாமுண்டீஸ்வரி கொரோனாவால் உயிரிழந்துள்ளது மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை செவிலியர் இந்திரா, வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் பிரேமா இருவரும் கொரோனாவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.