எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலை. பெயரில் பரவும் அறிக்கை உண்மையா? – தமிழக அரசு தெளிவுபடுத்த டி.டி.வி கோரிக்கை

 

எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலை. பெயரில் பரவும் அறிக்கை உண்மையா? – தமிழக அரசு தெளிவுபடுத்த டி.டி.வி கோரிக்கை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடுத்து வரும் மாதங்களில் உச்சத்தைத் தொடும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழக ஆய்வில் தெரியவந்ததாக வெளியான செய்தி உண்மையா என்பது பற்றி எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்த வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தமிழகத்தில் அடுத்தடுத்த மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் என்று எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அளித்து இருந்ததாக கூறப்படும் அறிக்கையை பழனிசாமி அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில் அரசு மேற்கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி மக்களுக்கு விளக்க மீண்டும். சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிபுணர் பாதிப்பின் வீரியம் குறித்து ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசுக்கு அறிக்கை அளித்து இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலை. பெயரில் பரவும் அறிக்கை உண்மையா? – தமிழக அரசு தெளிவுபடுத்த டி.டி.வி கோரிக்கைஅந்த அறிக்கையில் ஜூலை 15ம் தேதி வாக்கில் தமிழகத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள், இதில் சென்னையில் மட்டும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் பாதிப்புக்கு ஆளாவார்கள். இவர்களில் சென்னையை சேர்ந்த ஆயிரத்து 256 பேர் உட்பட தமிழகம் முழுவதும் பலியாவோர் எண்ணிக்கை 1949 ஆக இருக்கும். மேலும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனாவின் பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இப்படி இருப்பது உண்மை எனில் அதனை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை. அதோடு அந்த அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதையும் மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. ஏற்கனவே கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அப்படி இருந்தும் ஆளுமைமிக்க ஆட்சித் தலைமை இல்லாததால், அதிகாரிகளுக்குள் ஈகோ யுத்தம், ஒருங்கிணைப்பின்றி தடுமாறும் அரசு எந்திரம் என கொரோனாவைத் தடுப்பதில் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், ஆட்சியாளர்கள் இப்போதாவது விழித்துக் கொள்வது அவசியம்.

எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலை. பெயரில் பரவும் அறிக்கை உண்மையா? – தமிழக அரசு தெளிவுபடுத்த டி.டி.வி கோரிக்கைபாதிப்பு ஆயிரங்களில் இருக்கும்போதே அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. தனியார் மருத்துவமனைகளையும் அரசால் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய முடியவில்லை. 2 மாதங்களுக்கு முன்பே சென்னை மாநகராட்சியின் வசம் ஒப்படைக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்களை எப்படி பயன்படுத்துவது என்ற திட்டமும் அதற்கான செயல்பாடுகளும் அரசிடம் இருப்பதாக தெரியவில்லை.
செப்டம்பர், அக்டோபரில் மழைக்காலம் என்பதால் அப்போது கொரோனா உச்சத்திற்குப் போனால் என்ன செய்வது என்று யோசித்து அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதிலும் சென்னையில் வடிகால்களைச் சரி செய்தல் உள்ளிட்ட பணிகளை இப்போதே செய்தால்தான் மழைக்கால பாதிப்புகள் சேர்ந்த பாதிப்புகளோடு சேர்ந்து கொரோனா பாதிப்புகளையும் எதிர்கொள்ள முடியும்.
எனவே மருத்துவ பல்கலைக்கழக அறிக்கையை வெளியிட்டு, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் பற்றி தமிழக ஆட்சியாளர்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் ஒரு வேளை ஆளுமையற்ற பழனிசாமி அரசால் எதுவுமே செய்ய முடியாவிட்டால் மக்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள முயற்சிப்பார்கள் அல்லவா?” என்று கூறியுள்ளார்