கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் – கமாண்டோ வீரர்கள் பங்கேற்பு!

 

கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் – கமாண்டோ வீரர்கள் பங்கேற்பு!

தர்மபுரி

கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தீயணைப்புத்துறை சார்பில் தர்மபுரியில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் – கமாண்டோ வீரர்கள் பங்கேற்பு!

தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில், உதவி மாவட்ட அலுவலர் ஆனந்த் தலைமையில் கமாண்டோ வீரர்கள் மற்றும் பணியாளர்கள் சுமார் 40 பேர் கலந்துகொண்டனர். இந்த பேரணி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி தர்மபுரி 4 ரோடு வழியாக தீயணைப்பு நிலையம் வரை நடைபெற்றது.