அட டேய்… இதிலும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாசகமா!

 

அட டேய்… இதிலும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாசகமா!

புதுச்சேரியில் பால் பாக்கெட்டுகளில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்படுவது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

நாடெங்கிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் தலைதூக்கியுள்ளது. மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லையென்றால் பாதிப்பை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை. அதனால், விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் காவல்துறையினரும் அரசு அதிகாரிகளும் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் சுவரொட்டிகள் மூலமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அட டேய்… இதிலும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாசகமா!

இந்த நிலையில், புதுச்சேரியில் பாண்லே பால் பாக்கெட்டுகளில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றிருப்பது அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளது. தேர்தலின் போதே விழிப்புணர்வு வாசகங்களை அச்சிட பாண்லே நிறுவனம் தொடங்கிவிட்டது. இனி தினமும் பால்பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெறும் வண்ணம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அட டேய்… இதிலும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாசகமா!

இது குறித்து பேசிய அந்நிறுவன இயக்குநர், தடுப்பூசி நம்மைக் காப்போம் – நாட்டை காப்போம் என்ற வாசகமும் உங்களுடைய முகக்கவசம் என்னை பாதுகாக்கும் என்ற வாசகமும் அதில் இடம்பெற்றுள்ளன. தினமும் வாசகங்களை அச்சிட முடிவு செய்துள்ளோம். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சியில் இறங்கியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.