புதுச்சேரியில்  மரத்தடியில் நடந்த பேரவை கூட்டம் : காவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு !

 

புதுச்சேரியில்  மரத்தடியில் நடந்த பேரவை கூட்டம் : காவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு  !

புதுச்சேரி கதிர்காமம் தொகுதி என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா உறுதியான நிலையில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரியில்  மரத்தடியில் நடந்த பேரவை கூட்டம் : காவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு  !

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மூன்று நாட்கள் பேரவை நிகழ்வுகளில் ஜெயபால் கலந்து கொண்டுள்ளார். ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதியானதால் புதுச்சேரி பேரவை கூட்டம் நேற்று நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.
இருப்பினும் சட்ட பேரவை கூட்டம் நேற்று அதே வளாகத்தில் மரத்தடியில் நடந்து முடிந்தது.

புதுச்சேரியில்  மரத்தடியில் நடந்த பேரவை கூட்டம் : காவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு  !

இந்நிலையில்  மரத்தடியில் நடந்த பேரவை கூட்டத்தின் போது பணியில் இருந்த நிலையில் காவலருக்கு தொற்று கண்டறியப்பட்டது; காவலருக்கு தொற்று உறுதியானதால் சட்டப்பேரவை வளாகம் புதன்கிழமை வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.