மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலுக்கு கொரோனா உறுதி!

 

மத்திய அமைச்சர்  பிரகலாத் சிங் பட்டேலுக்கு கொரோனா உறுதி!

மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

மத்திய அமைச்சர்  பிரகலாத் சிங் பட்டேலுக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 50,20,359 லிருந்து 51,18,254 ஆக அதிகரித்துள்ளது.குறிப்பாக இந்தியாவில் ஒரே நாளில் 97,894 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
குணமடைந்தோர் எண்ணிக்கை 39.42 லட்சத்திலிருந்து 40.25 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 83,198 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய அமைச்சர்  பிரகலாத் சிங் பட்டேலுக்கு கொரோனா உறுதி!

இந்நிலையில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங்க் பட்டேலுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலர் தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.