ஈரோட்டில் ஒரு மாதத்தில் 3,883 பேருக்கு கொரோனா பாதிப்பு

 

ஈரோட்டில் ஒரு மாதத்தில் 3,883 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 3 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், ஈரோட்டில் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஈரோட்டில் ஒரு மாதத்தில் 3,883 பேருக்கு கொரோனா பாதிப்பு

மேலும், தற்போது வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அறிகுறி இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. கொரேனா பாதிப்பு குறித்த
நேற்றைய சுகாதாரத்துறை அறிக்கையில் ஈரோடு மாவட்டத்தில் மேலும் 127 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 8 ஆயிரத்து 648 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் நேற்று வைரஸ் பாதிப்பிலிருந்து 131 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தார் எண்ணிக்கை 7 ஆயிரத்து 522 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆயிரத்து 22 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 104 பேர் பலியாகியுள்ளனர். கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் மட்டும் 3 ஆயிரத்து 883 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஈரோட்டில் ஒரு மாதத்தில் 3,883 பேருக்கு கொரோனா பாதிப்பு

இதேகால கட்டத்தில் 3 ஆயிரத்து 676 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். மேலும், 43 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் பாதிப்பு எந்த அளவுக்கு ஏற்படுகிறதோ, அதே அளவிற்கு குணமடைந்து வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது சற்று ஆறுதலை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடித்து பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள
முடியும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்

ஈரோட்டில் ஒரு மாதத்தில் 3,883 பேருக்கு கொரோனா பாதிப்பு