திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..!

 

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,496 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..!

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 80,961 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் சென்னையை காட்டிலும் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று தற்போது வேகம் எடுத்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..!

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 475 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,048ஆக அதிகரித்துள்ளது.