மதுரையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,857 ஆக உயர்வு!

 

மதுரையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,857 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,549 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது

மதுரையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,857 ஆக உயர்வு!

நேற்று மட்டும் 69 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 25 பேர் தனியார் மருத்துவமனையிலும் 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 82,128 ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,857 ஆக உயர்வு!

இந்நிலையில் மதுரையில் இன்று மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,857 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 4,534 ஆக உள்ள நிலையில் 134 பேர் உயிரிழந்துள்ளனர்.