சிதம்பரம் தலைமை காவலர் கொரோனாவால் உயிரிழப்பு!

 

சிதம்பரம் தலைமை காவலர் கொரோனாவால் உயிரிழப்பு!

கடலூர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் காவல் நிலைய தலைமை காவலர் ராஜ்குமார், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்தவர் ராஜ்குமார் (44). இவர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமாருக்கு, திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.

சிதம்பரம் தலைமை காவலர் கொரோனாவால் உயிரிழப்பு!

இதனையடுத்து, அங்குள்ள மருத்துவமனையில் பரிசோதித்தபோது, ராஜ்குமாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, அவர் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருந்தார்.

அங்கு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ராஜ்குமார், நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கொரோனாவால் தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.