கொரோனா 3வது அலை அக்டோபரில் உச்சமடையும் : அதிர்ச்சி தரும் தகவல்!!
Aug 2, 2021, 08:49 IST1627874345000
இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்று ஐஐடி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத் ஐஐடி மதுகுமளி வித்யாசாகர் மற்றும் கான்பூர் ஐஐடி மனிந்திரா அகர்வால் தலைமையிலான ஆராய்ச்சியின் முடிவில், கொரோனா 3ஆம் அலை ஆகஸ்ட் மாதத்தில் உருவாகும். அப்படி உருவாகும் பட்சத்தில் அக்டோபரில் கொரோனா 3ஆம் அலை உச்சமடையும். கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா மீண்டும் அதிகரிக்கும் நிலையில் நிச்சயம் கொரோனா 3ஆம் அலை உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் கொரோனா ஏற்பட்ட தாக்கம் மூன்றாம் அலையின் போது இருக்காது. இரண்டாம் அலையில் அதிகபட்சமாக 4 லட்சம் வரை பாதிக்கப்பட்ட நிலையில் மூன்றாம் அலையில் நிச்சயம் 1 லட்சம் முதல் 1.50 லட்சம் வரை பாதிப்பு ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.