கொரோனா 3வது அலை : 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

 

கொரோனா 3வது அலை : 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

நாளை மறுநாள் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார்.

கொரோனா 3வது அலை : 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது நிலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் மாநிலங்கள் முழுவதும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதேபோல சுற்றுலா தளங்களும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

இந்த சூழலில் 55 நாட்களுக்கு பின் மீண்டும் கொரோனா நோய் தொற்று பாதிப்பு இந்தியாவில் உயர தொடங்கியுள்ளது. மூன்றாவது அலை தாக்கம் இன்னும் ஒரு சில வாரங்களில் நிகழக் கூடும் என்பதால் மக்கள் கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் உள்ளிட்டவை எச்சரிக்கை விடுத்து வருகின்றன.

கொரோனா 3வது அலை : 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

இந்நிலையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிசா ,மகாராஷ்டிரா ஆகிய 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக நாளை மறுநாள் ஆலோசனை மேற்கொள்கிறார். மூன்றாவது அலை தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கும் பிரதமர், தளர்வுகள் வழங்குவதில் கவனம் தேவை என அறிவுறுத்த உள்ளதாக தெரிகிறது.