கொரோனா 3-வது அலை : ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் திடீர் கோரிக்கை!

 

கொரோனா 3-வது அலை : ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் திடீர் கோரிக்கை!

கொரோனா 3-வது அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா நோயின் தாக்கம் குறைந்து கொண்டே வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும், மூன்றாவது அலையின் தாக்கம் தவிர்க்க முடியாதது என்றும் இரண்டாவது அலையை விட மூன்றாவது அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து வருவதால் வருமுன் காப்போம் என்பதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம்.

முதல் அலையின் போது அதாவது 2020ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகபட்சமாக 97 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. இரண்டாவது அலையின் போது அதாவது 2021 ஆம் ஆண்டு ஒருநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகபட்சமாக 4 லட்சத்து 14 ஆயிரமாக அதிகரித்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முதல் அலையின் போது ஒருநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகபட்சமாக 7 ஆயிரம் என்ற அளவில் இருந்தது . இரண்டாவது அலையின் போது ஒருநாள் பாதிப்பு 36 ஆயிரம் என்ற அளவுக்கு உயர்ந்தது.

கொரோனா 3-வது அலை : ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் திடீர் கோரிக்கை!

இதன் காரணமாக இதை சமாளிக்கும் அளவுக்கு சுகாதார கட்டமைப்புகள் இல்லாத நிலை ஏற்பட்டு ஒரு நாள் உயிர் இழப்பு என்பது அதிகரித்தது. பல்வேறு நாடுகளில் ஒரு அலையின் தாக்கம் அதன் முந்தைய அலையை விட தீவிரமாகி உள்ளது. இந்தியாவின் இரண்டாவது அலையின் தாக்கம் நமக்கு கடுமையான விளைவுகளை உண்டாக்கி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கையை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.

கொரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தை அறிய முன்கணிப்பு மாதிரிகள் மிகவும் அவசியம். இதை வைத்துதான் மூன்றாவது அலையின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை அறியமுடியும். நோயினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கையும் கணக்கிடுவது அவசியம் . இதை வைத்து எதிர்காலத்திற்கு தேவையான கட்டமைப்புகளை மருத்துவ உபகரணங்களை தயார் செய்து கொள்வதற்கான முடிவுகளை எடுக்க முடியும்.

கொரோனா நோயினால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கும் நோய் எதிர்ப்பு திறன் இருக்கும் என்பதால் இவர்களை தவிர்த்து மீதமுள்ளவர்கள் எத்தனை பேர் என்பதை கண்டறிந்து முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு எவ்வளவு விரைவில் தடுப்பூசி செலுத்த முடியுமோ அவ்வளவு விரைவில் தடுப்பூசி செலுத்தவும். இதனை தொடர்ந்து அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

கொரோனா 3-வது அலை : ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் திடீர் கோரிக்கை!

தமிழ்நாட்டில் நேற்று காலை நிலவரப்படி மொத்தம் 1,12,64,069 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் மக்கள் தொகை தற்போது கிட்டத்தட்ட 8 கோடி என்று எடுத்துக் கொண்டாலும் 16 கோடி தடுப்பூசிகள் நமக்கு தேவை. இதில் 1,12,64,069 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ள நிலையில் 14,87,35,931 தடுப்பூசிகள் இன்னமும் செலுத்தப்பட வேண்டும். அதாவது இதுவரை 7.5 விழுக்காடு தடுப்பூசிகள்தான் செலுத்தப்படுகின்றன. இன்னமும் ஒன் 92.5 விழுக்காடு தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் இதுதான் மூன்றாவது அலையை கட்டுப்படுத்த மிக முக்கியமான வழி.

கொரோனா 3-வது அலை : ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் திடீர் கோரிக்கை!

இதுமட்டுமல்லாமல் மூன்றாவது அலையை தடுக்கும் நோக்கில் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்தல், தொற்று உறுதியானால் அவர்களின் இருப்பிடம் அறிந்து அவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்துதல் , அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை 14 நாட்கள் விலக்கி வைத்தல், முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குதல் , சமூக இடைவெளியை பராமரிக்கும் வகையில் பயணத்தில் கட்டுப்பாடுகளை விடுதல் , பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க ஆகியவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது மிக அவசியம்.

எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தனி கவனம் செலுத்தி மூன்றாவது அலை ஏற்படாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வராமலிருக்க கட்டுப்பாடு பொதுமக்கள் இடத்தில்தான் இருக்கிறது என்ற விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்தவேண்டும் என்றும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.