அத்து மீறிய போலீஸ் ; அலறிய பெண்… கொரோனா தனிமை மையத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

 

அத்து மீறிய போலீஸ் ; அலறிய பெண்… கொரோனா தனிமை மையத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

பெண்களுக்கு பாலியல் தொல்லை தரும் போலீஸ் ! தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் பெண்களுக்கு போலீஸ் தொல்லை !!

உத்தரகண்ட் மாநிலம் உதம்சிங் நகர். ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் ஒரு பெண்ணுக்கு ஒரு போலீஸ்காரர் பாலியல் தொல்லை தந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சமீபத்தில் டெல்லியில் இருந்து கணவருடன் திரும்யி அந்தப் பெண் புல்பட்டா பகுதியில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அங்கு காவல் இருக்கும் ஒரு காவலரே அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவருக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்து மீறிய போலீஸ் ; அலறிய பெண்… கொரோனா தனிமை மையத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!
கிச்சாவின் புல்பட்டா பகுதியில் உள்ள சூரஜ்மல் நிறுவனத்தில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையம் அமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து புதிதாக திரும்பிய தம்பதி தங்கி உள்ளனர். பணியில் இருந்த ஒர போலீஸ்காரர் மதுபானம் குடித்துவிட்டு குடிபோதையில் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். அப்போது அந்த பெண் மறுக்க அவரது ஆடைகளைக் கிழித்துள்ளார். இதனால் பயந்து போன அந்த பெண் ஓடிவந்துவிட்டார். பின்னர் காவல்துறையிடம் புகார் கொடுத்தார். இதுகுறித்து எம்.எல்.ஏ ராஜேஷ் சுக்லா ஆட்சேபனை வேதனை தெரிவித்துள்ளார். “இந்த சம்பவம் காவல்துறையின் பெயரை கெடுத்துவிட்டது. குற்றம் சாட்டப்பட்ட காவலரை விசாரித்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அவர் உறுதியளித்தார். குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது