“நீ மாஸ்க் போடலே ,அதனால கேஸ் போடப்போறேன்” -பெண்ணை மிரட்டி போலீஸ் செஞ்ச பலான வேலை .

 

“நீ மாஸ்க் போடலே ,அதனால கேஸ் போடப்போறேன்” -பெண்ணை மிரட்டி போலீஸ் செஞ்ச பலான வேலை .

மாஸ்க் போடாமல் சென்ற பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த கான்ஸ்டபிள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

“நீ மாஸ்க் போடலே ,அதனால கேஸ் போடப்போறேன்” -பெண்ணை மிரட்டி போலீஸ் செஞ்ச பலான வேலை .

குஜராத்தின் சூரத்தில் உள்ள ஒரு போலீஸ் கான்ஸ்டபிளாக வேலை பார்க்கும் 30 வயதான நரேஷ் கபாடியா அங்குள்ள காவல் நிலையத்தில் பணிபுரிகிறார் .இந்நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையில் நின்று கொரானா பரவலை தடுக்க மாஸ்க் போடதாவர்களை பிடிக்கும் பணியில் இருந்தார் .அப்போது அந்த சாலையில் 25 வயதான  பெண்ணொருவர் மாஸ்க் போடாமல் சென்று கொண்டிருந்தார் .அதை பார்த்த அந்த போலீஸ் அந்த பெண்ணிடம் மாஸ்க் போடாமல் போனதால் உன்மீது வழக்கு போடவேண்டும் என்று மிரட்டி அவரை போலீஸ் ஸ்டேஷன் கூட்டி போகாமல் ஒரு வீட்டிற்கு கூட்டி சென்றார் .பின்னர் அந்த பெண்ணை பல கோணங்களில்  படம் பிடித்து ,அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இவ்வாறு அடிக்கடி அந்த பெண்ணை அந்த வீட்டிற்கு வரவைத்து மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார் .இதனால் அந்த பெண் இதை தன்னுடைய கணவரிடம் கூறினார் .அதை கேட்டு அந்த கணவரும் அந்த பெண்ணும் அந்த போலீசின் வீட்டில் சென்று சண்டை போட்டனர் .

அதனால் அந்த போலீசின் மனைவி அந்த நபர்கள் மீது புகார் கொடுத்தார் .அதன்  பிறகு அந்த பெண்ணும் அந்த கணவரும் அந்த கான்ஸ்டபிள் மீது பலாத்கார புகார் கொடுத்தனர் .பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரித்ததில் அந்த பெண்ணும் அந்த கான்ஸ்டபிளும் முன்னாள் காதலர்கள் என்று தெரியவந்தது ,மேற்கொண்டு விசாரணை நடைபெறுகிறது.