தொழிலதிபரிடம் பணம் கறக்க ஸ்கெட்ச் போட்ட போலீஸ், கள்ளகாதலியுடன் சிறையில் அடைப்பு

 

தொழிலதிபரிடம் பணம் கறக்க ஸ்கெட்ச் போட்ட போலீஸ், கள்ளகாதலியுடன் சிறையில் அடைப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொழிலதிபரின் மகளின் வீடியோக்களை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டிய போலீஸ்காரர் மற்றும் அவரது கள்ளக் காதலி கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓதவ் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் தஷ்ரத்சிங் பர்மர். இவரது காதலி பெயர் ரூபல் மகேசுரியா. மகேசுரியா தொழிலதிபர் ஒருவர் மகளின் சினேகிதி. இவர்கள் இருவரும் சேர்ந்து எம்பிராயடரி வணிகம் செய்யும் ஒரு தொழிலதிபரை மிரட்டி பணம் கேட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலதிபர் கூறுகையில், மே 22 முதல் மே 24 வரை பணம் கேட்டு பலமுறை மிரட்டப்பட்டேன். தனது 22 வயது மகளின் வீடியோக்களையும் படங்களையும் வெளியிடால் இருக்க ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டினர். மே 22 அன்று மாலை 4.30 மணியளவில் எனக்கு முதல் முறையாக தெரியாத எண்ணிலிருந்து ஒரு மிரட்டல் அழைப்பு வந்தது. நான் எண்ணை அழைத்தபோது, அந்த நபர் எனது பெயரை மட்டும் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.”

தொழிலதிபரிடம் பணம் கறக்க ஸ்கெட்ச் போட்ட போலீஸ், கள்ளகாதலியுடன் சிறையில் அடைப்பு
“பின்னர், அவர் என்னை வாட்ஸ்அப் மூலம் அழைத்து எனது மகளின் படங்களும் வீடியோக்களும் தன்னிடம் இருப்பதாகவும் அவற்றை கசியவிடாமல் இருக்க ரூ.15 லட்சம் மிரட்டினர்.
மே 22 இரவு 11 மணிக்குள் பணம் செலுத்தாவிட்டால் மகளின் வீடியோக்களை இணையதளத்தில் பதிவிடுவதாக மிரட்டினர். பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. மீண்டும் என்னை மே 24 காலை 8.30 மணிக்கு அழைத்து போலீசுக்கு தெரிவிக்கக்கூடாது என மிரட்டினர். பின்னர் சைபர் கிரைம் காவல் நிலையத்தை அணுகினேன். அந்த மிரட்டல் விடுத்தது ஓதவ் காவல் நிலைய கான்ஸ்டபிள் மற்றும் அவரது காதலி மகேசுரியா என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் அவர்களை கைது செய்தனர்.