சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ் கான்ஸ்டபிள் கைது!

 

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ் கான்ஸ்டபிள் கைது!

ஹைதராபாத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட காவலர் வி.எஸ்.உமேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இரண்டு மாதங்களுக்கு முன்பே நடந்துள்ளது. சிறுமியின் குடும்பத்தினர் புகார் அளித்த பின்னர் தான் இந்தக் கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி வசித்துவரும் குடியிருப்பின் முதல் தளத்தில் அந்தக் காவலர் வசித்து வந்துள்ளார். சிறுமி தனியாக வீட்டில் இருந்த பொழுது உமேஷ் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ் கான்ஸ்டபிள் கைது!

சிறுமி இந்த சம்பவத்தைப் பற்றி தனது தாயிடம் கூறியுள்ளார். பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்தக் காவலர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து பதிலளித்த ராச்சகொண்டா போலீஸ் கமிஷனர் அஞ்சனி குமார் “சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கான்ஸ்டபிளை நாங்கள் கைது செய்ய வேண்டியிருந்தது. அவர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இது போன்ற சம்பவம் நடந்ததற்கு நான் வெட்கப்படுகிறேன். எங்கள் துறையிலும் சில கருப்பு ஆடுகள் உள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.