வீடு புகுந்து சமையல் மாஸ்டர் சரமாரியாக வெட்டிக் கொலை : அதிர்ச்சி சம்பவம்!

 

வீடு புகுந்து சமையல் மாஸ்டர் சரமாரியாக வெட்டிக் கொலை : அதிர்ச்சி சம்பவம்!

கிருஷ்ணகிரி அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த சமையல் மாஸ்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயமணி. இவர் தனது நண்பர் தேவபாண்டியனுடன் கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகரில் வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து சமையல் ஆர்டர்கள் செய்து கொடுக்கும் வேலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு ஜெயமணி வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே அங்கு சென்ற பொதுமக்கள் ஜெயமணி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேவபாண்டியனும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார்.

வீடு புகுந்து சமையல் மாஸ்டர் சரமாரியாக வெட்டிக் கொலை : அதிர்ச்சி சம்பவம்!

அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஜெயமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு தேவபாண்டியனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் வீட்டில் கிடைக்கப்பெற்ற கைத் தடயங்களை வைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த அப்பகுதியில் கொலை சம்பவம் அரங்கேறியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.