முகமது நபி குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு; கோவை இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்குப்பதிவு

 

முகமது நபி குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு; கோவை இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்குப்பதிவு

கோவை

கோவையில் முகமது நபி குறித்து மீண்டும் சர்ச்சைக்கு உரிய வகையில் பேசிய இந்து முன்னணி நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவையில் சமீபத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில், முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய விதமாக பேசிய பாஜக நிர்வாகி கல்யாணராமன் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்தும், கைதானவர்களை விடுவிக்கக் கோரியும் நேற்று முன்தினம் சிங்காநல்லூரில் இந்து முன்னிணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முகமது நபி குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு; கோவை இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்குப்பதிவு

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய அக்கட்சி நிர்வாகி ஜெய்கணேஷ் என்பவர், முகமது நபி குறித்து மீண்டும் சர்ச்சைக்கு உரிய விதமாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து, சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசார் இந்து முன்னணி நிர்வாகி ஜெய்கணேஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.