தொடரும் சட்டவிரோத கைதுகள்… மாவட்டச் செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் அவசர கூட்டத்தை கூட்டும் மு.க.ஸ்டாலின்!
தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களுடனான ஆலோசனைக் கூட்டம் நாளை காலை நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தி.மு.க மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை (24ம் தேதி) காலை 10 மணிக்கு என் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.
“திமுக மாவட்ட செயலாளர்கள் – நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை (24-05-2020) காலை 10 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் நடைபெறும்”
– கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிவிப்பு.#DMK #MKStalin pic.twitter.com/UyJchmfA9K
— DMK (@arivalayam) May 23, 2020
தி.மு.க மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்கிறேன்.
கூட்டத்தில் தி.மு.க-வினர் மீது முதலமைச்சர் மற்றும் அ.தி.மு.க அமைச்சர்களின் தூண்டுதலின் பேரில் பொய் வழக்கு புனைவது, சட்டவிரோத, ஜனநாயக விரோத காவல்துறை கைதுகள் குறித்து விவாதிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
“எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகளுக்கு திமுக அஞ்சாது;
கொரோனா கால ஊழலையும் – நிர்வாகத் தோல்வியையும் திசைதிருப்ப எடப்பாடி திரு. பழனிசாமி, குரோத எண்ணத்துடன் #RSBharathi -ஐ கைது செய்துள்ளார்”
– கழக தலைவர்@mkstalin அவர்கள் அறிக்கை.
Link: https://t.co/3qIx2QYQcZ#DMK pic.twitter.com/VcRF2PwMpq
— DMK (@arivalayam) May 23, 2020