பைக் மீது கண்டெய்னர் லாரி மோதல்- ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி பலி

 

பைக் மீது கண்டெய்னர் லாரி மோதல்- ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி பலி

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி உயிரிழந்தார். திருப்பத்தூர் வீட்டுவசதி வாரியம் பகுதி ஒன்றில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி ராமசாமி(70). இவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் கோத்தானகுப்பம் பகுதியில் நிலம் உள்ளதால், அவ்வப்போது விவசாய பணிகளை மேற்பார்வையிட்டு வருவது வழக்கம். இதேபோல், இன்று காலை விவசாய பணிகளை முடித்துக்கொண்டு திருப்பத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தார்.

பைக் மீது கண்டெய்னர் லாரி மோதல்- ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி பலி

திருப்பத்தூர் வேலன் நகர் அருகே சென்றபோது, பின்னால் வந்த கண்டெய்னர் வாகனம் ஒன்று முந்திச் செல்ல முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதியதில் ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செனற கண்டெய்னர் வாகனத்தை, பொதுமக்கள் துரத்திச்சென்று பிடித்து கந்தலி போலீசாரிடம் ஒப்படைத்தனர். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.