மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி!

 

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி!

திருச்சி

திருச்சியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் துவாக்குடி மலை பகுதியை சேர்ந்தவர் ரவி. சென்ட்ரிங் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் திருச்சி புத்தூர் பாராதி நகர் பகுதியில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கம்பி கட்டுவதற்காக இரும்பு கம்பியை தரை தளத்தில் இருந்து மேலே தூக்கிச் சென்று கொணடிருந்தார்.

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி!

அப்போது, எதிர்பாராத விதமாக இரும்பு கம்பி அருகே சென்ற மின்சார ஒயரில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்ட அவர் மயங்கினார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக ரவியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ரவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து, புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழககுப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.