சிறுமியை திருமணம் செய்த கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது
Dec 23, 2020, 21:56 IST1608740777000
சேலம்
தர்மபுரி அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். தர்மபுரி மாவட்டம் சின்னம்பள்ளி அடுத்த ஆரரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் காசி மகன் அன்பு (25). இவர் கட்டிட மேஸ்திரியாக பணி புரிந்து வருகிறார். இவருக்கு, கடந்த மார்ச் மாதம் சேலம் மாவட்டம்
பள்ளப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி உடன் திருமணம் நடைபெற்று உள்ளது.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அந்த சிறுமி, மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு 18 வயது நிறைவடைய வில்லை என்பதை அறிந்து போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சேலம் காவல் ஆய்வாளர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அன்புவை கைது செய்து சிறையில் அடைத்தார்.