ஆகஸ்டு 5ல் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடக்கம்!

 

ஆகஸ்டு 5ல் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடக்கம்!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை எப்போது தொடங்குவது என்று நடந்த ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் வருகிற 5ம் தேதி கட்டுமானப் பணியை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆகஸ்டு 5ல் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடக்கம்!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து ராமநவமி அன்று பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டது. இதற்காக மார்ச் மாதம் மிகப்பெரிய யாத்திரை நடத்த யோகி ஆதித்யநாத் திட்டமிட்டிருந்தார். அதற்குள்ளாக கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்படவே கட்டுமானப் பணிகள் தொடங்குவது தடைபட்டது. அதன்பிறகு ஜூன் மாதம் கட்டுமானப் பணி தொடங்க திட்டமிட்ட போது சீனா நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. போர் மூளும் ஆபத்து இருந்ததால் கட்டுமானப் பணி தடைப்பட்டது.

ஆகஸ்டு 5ல் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடக்கம்!

இந்த நிலையில் மீண்டும் கட்டுமானப் பணியை எப்போது தொடங்கலாம் என்று முடிவு செய்ய ஶ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தினர்.

ஆகஸ்டு 5ல் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடக்கம்!

அந்த கூட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோவில் கட்டுமானப் பணியை மீண்டும் தொடங்குவது என்றும், பிரதமர் மோடியை இந்த தொடக்க விழாவுக்கு அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிர்திய கோபால் தாஸ் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.