டாக்சிக்கு காத்திருந்த பெண் -காரில் லிப்ட் கொடுத்த போலீஸ் -அடுத்து அந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை

 

டாக்சிக்கு காத்திருந்த பெண் -காரில் லிப்ட் கொடுத்த போலீஸ் -அடுத்து அந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை


ஒரு பெண்ணுக்கு தங்களின் காரில் லிப்ட் கொடுத்து கெடுத்த ஒரு கான்ஸ்டபிளையும் அவரின் நண்பரையும் போலீசார் கைது செய்தனர்

டாக்சிக்கு காத்திருந்த பெண் -காரில் லிப்ட் கொடுத்த போலீஸ் -அடுத்து அந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை


உத்தரபிரதேச மாநிலத்தின் காஸ்கஞ்சில் போலீஸ் கான்ஸ்டபிளாக வேலை பார்க்கும் தர்மேந்திர குமார் மற்றும் அவரது நண்பர் பிரதீப் குமார் ஆகியோர் ஒரு காரில் சென்று கொண்டிருந்தார்கள் .அப்போது அந்த பகுதியில் ஓரு 23 வயதான இளம் பெண் மருந்து வாங்கிவிட்டு வீட்டுக்கு போக நின்று கொண்டிருந்தார் .அந்த பெண் கால் டாக்சி புக் பண்ணிவிட்டு அது வரும்வரை சாலையில் நின்று காத்துக்கொண்டிருந்தார் .
அப்போது ஒரு காரில் வந்த போலீஸ் கான்ஸ்டபிள் தர்மேந்திரா அந்த பெண்ணை பார்த்து தன்னுடைய காரில் வருமாறு கூறினார் .அந்த பெண்ணும் அதற்கு சம்மதித்து அவரோடு காரில் சென்றார் .அதன் பிறகு அந்த தர்மேந்திராவும் அவரின் நண்பரும் அந்த பெண்ணை ஒரு மறைவான இடத்திற்கு கடத்தி சென்றனர் .பிறகு இருவரும் அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர் .அதன் பிறகு அந்த பெண்ணிடம் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர் .
கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த சம்பவம் அந்த பகுதியில் நடந்தது .ஆனால் அந்தப் பெண் மறுநாள் அவர்களின் மிரட்டலுக்கு பயப்படாமல் அங்குள்ள காவல் நிலையம் சென்று அவர்கள் மீது புகார் கூறினார் .பிறகு அந்த பெண்னின் புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தர்மேந்திராவையும் அவரின் நண்பரையும் கைது செய்தார்கள் .அப்போது தர்மேந்திந்திரா மீது ஏற்கனவே பணிக்கு ஒழுங்காக வராத காரணத்தால் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினார்கள் .

டாக்சிக்கு காத்திருந்த பெண் -காரில் லிப்ட் கொடுத்த போலீஸ் -அடுத்து அந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை