சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு.. உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுகிறது.. சிவ சேனா

 

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு.. உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுகிறது.. சிவ சேனா

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது இந்திய திரைப்பட உலகில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கான காரணம் குறித்து மகாராஷ்டிரா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தந்தை பாட்னா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், பீகார் போலீசாரும் அந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு.. உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுகிறது.. சிவ சேனா

இதற்கிடையே சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க பரிந்துரை செய்து பீகார் அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியது. இதனை ஏற்றுக்கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம் அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில், மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக பெரிய சதித்திட்டம் தீட்டப்படுகிறது என சிவ சேனா குற்றம் சாட்டியுள்ளது.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு.. உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுகிறது.. சிவ சேனா

இது தொடர்பாக சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் கூறுகையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக பீகார் மற்றும் டெல்லியில் என்ன வகையான அரசியல் நடைபெறுகிறத என்பதை பார்த்தால், உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுவது தெளிவாகிறது. மும்பை காவல்துறை ஒரு திறமையான சக்தி மற்றும் உண்மையை வெளிக்கொணர தன்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறது என தெரிவித்தார். நடிகர் சுஷாந்த் மரணத்தில் ஆதித்யா தாக்கரேவுக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதுவரை அது தொடர்பாக மவுனம் காத்து வந்த ஆதித்யதாக்கரே தனது மவுனத்தை கலைத்து உள்ளார். அவை எல்லாம் அழுக்கான அரசியல் என தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஆதித்யதாக்கரே மறுத்துள்ளார்.