திமுக கூட்டணியில் 41 தொகுதிகளை வழங்கக்கோரி காங்கிரஸ் மகளிர் நிர்வாகிகள் சாலைமறியல்

 

திமுக கூட்டணியில் 41 தொகுதிகளை வழங்கக்கோரி காங்கிரஸ் மகளிர் நிர்வாகிகள் சாலைமறியல்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகளை ஒதுக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் மகளிர் நிர்வாகிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விருப்பம் தெரிவித்திருக்கிறது. ஆனால் திமுக தரப்பிலோ, காங்கிரசின் எதிர்பார்ப்பில் பாதிக்கும் கிழே இறங்கிச்செல்வதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. இதனால், திமுகவிலிருந்து காங்கிரஸ் வெளியேற முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 28 தொகுதிகள்தான் தரமுடியும் என்று சொல்லி வந்த திமுக இப்போது 25 தொகுதிகளை தர முன்வந்திருக்கிறது. ஆனால், 27 வேண்டும் என்று காங்கிரஸ் கறாராக கூறிவருகிறது. ஆனால், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்று காங்கிரஸ் தமிழக பொறூப்பாளர் திணேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் 41 தொகுதிகளை வழங்கக்கோரி காங்கிரஸ் மகளிர் நிர்வாகிகள் சாலைமறியல்

இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகளை ஒதுக்க வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் மகளிர் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து சென்றனர்.