ராகுல் காந்தி கைது; ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

 

ராகுல் காந்தி கைது; ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஹத்ராஸ் செல்லமுயன்ற ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்திர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயதான இளம்பெண், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதால் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இதனை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தடையை மீறி ஹத்ராஸ் செல்ல முயன்ற ராகுல் காந்தி காவல்துறையினரால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

ராகுல் காந்தி கைது; ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் புதுச்சேரி முதல்வரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மூலப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராகுல் காந்தி கைது; ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனிச்சாமி , மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் உத்தரபிரதேச அரசு உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் , ராகுல் காந்தி தாக்கி கைது செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்து வந்த போலீசார், ஈரோடு – பழனி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.