”தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாற்றி விடுவேன்; தளபதிதான் தட்டிக்கேட்க சொல்லிருக்கிறார்”

 

”தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாற்றி விடுவேன்; தளபதிதான் தட்டிக்கேட்க சொல்லிருக்கிறார்”

சென்னை வண்ணாரப்பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உதவி ஆய்வாளரை ”தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாற்றி விடுவேன்” என காங்கிரஸ் பிரமுகர் மிரட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

”தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாற்றி விடுவேன்; தளபதிதான் தட்டிக்கேட்க சொல்லிருக்கிறார்”

சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர் ராஜா, வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே வாகன சோதனையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தார். அங்கு ஊரடங்கை மீறி சுற்றி திரிந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து கொண்டிருந்தார். அப்போது காங்கிரஸ் பிரமுகரின் உறவினர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போது, அவருக்கு ஆதரவாக கொருக்குபேட்டையை சேர்ந்த காங்கிரசு பிரமுகர் பிரபா என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.

இதனையடுத்து தனது உறவினர் இருசக்கர வாகனத்தை காவல் உதவி ஆய்வாளர் ராஜாவிடம் கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து ஆத்திரமடைந்த காங்கிரஸ் பிரமுகர் பிரபா காவல் உதவி ஆய்வாளரை பார்த்து பெட்டிசன் போட்டு தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றி விடுவதாக கூறி மிரட்டல் விடுத்தார். அதுமட்டுமின்றி தளபதி போலீசார் தவறு செய்தால் கூட தட்டி கேட்க வேண்டும் என கூறி இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.