பினராயி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்… கேரள சட்டமன்றத்தில் விவாதம் தொடங்கியது

 

பினராயி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்… கேரள சட்டமன்றத்தில் விவாதம் தொடங்கியது


பினராயி விஜயனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான விவாதம் இன்று சட்டப்பேரவையில் தொடங்கியது.

பினராயி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்… கேரள சட்டமன்றத்தில் விவாதம் தொடங்கியது


கேரளாவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்திய வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் முதல்வரின் தனிச் செயலாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் முதல்வரின் அலுவலகத்துக்குத் தொடர்பு உள்ளதால் முதல்வர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன
இதையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை அவை தொடங்கியதும் காங்கிரஸ் எம்.எல்.ஏ வி.டி.சதீஷன் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

பினராயி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்… கேரள சட்டமன்றத்தில் விவாதம் தொடங்கியது


எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா காலையில் அவை கூடியதும் புது பிரச்னை ஒன்றை எழுப்பினர். சபாநாயகர் மீதும் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதால் அவர் சபாநாயகராக இருந்து பேரவையை வழிநடத்தக் கூடாது என்று கூறினார்.

பினராயி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்… கேரள சட்டமன்றத்தில் விவாதம் தொடங்கியது

அதற்கு சபாநாயகர், “இது தொடர்பான நோட்டீஸ் 14 நாட்களுக்கு முன்புதான் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, விதிமுறைப்படி அந்த நோட்டீஸ் தற்போது அனுமதிக்க முடியாது” என்றார்.

பினராயி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்… கேரள சட்டமன்றத்தில் விவாதம் தொடங்கியது


140 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட கேரள சட்டமன்றத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு 91 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 45 எம்.எல்.ஏ-க்களும், பா.ஜ.க மற்றும் சுயேட்சையாக தலா ஒரு எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இரண்டு பதவியிடங்கள் காலியாக உள்ளன. இன்றைய கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியுறும் என்றாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி தொடர்பான விவாதம் அவைக்குறிப்பில் இடம் பெறும் என்பது அதற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.