தேர்தல்களில் ஜெயிக்க வேண்டுமானால் பா.ஜ.க.வை பின்பற்ற வேண்டும்.. காங்கிரஸ் மூத்த தலைவர் யோசனை

 

தேர்தல்களில் ஜெயிக்க வேண்டுமானால் பா.ஜ.க.வை பின்பற்ற வேண்டும்.. காங்கிரஸ் மூத்த தலைவர் யோசனை

தேர்தல்களில் ஜெயிக்க வேண்டுமானால் பா.ஜ.க.வை பின்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரஷீத் அல்வி யோசனை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வருகிறது. சுமார் 70 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த பாரம்பரியமிக்க கட்சியான காங்கிரஸ் தனது பெருமை இழந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பல தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து வருகிறது. பல மாநிலங்களில் தனது ஆட்சியை பா.ஜ.க.விடம் காங்கிரஸ் பறிகொடுத்துள்ளது. மேலும், காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும் என்று பா.ஜ.க. கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது.

தேர்தல்களில் ஜெயிக்க வேண்டுமானால் பா.ஜ.க.வை பின்பற்ற வேண்டும்.. காங்கிரஸ் மூத்த தலைவர் யோசனை
பா.ஜ.க.

இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் வரும் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமானால் பா.ஜ.க.வை பின்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியிருப்பது பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ரஷீத் அல்வி இது தொடர்பாக கூறியதாவது: அமித் ஷா தனது சொந்த யுக்தியை கொண்டுள்ளார். தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சியும் தனது சொந்த யுக்தியை வெளிப்படுத்த வேண்டும்.

தேர்தல்களில் ஜெயிக்க வேண்டுமானால் பா.ஜ.க.வை பின்பற்ற வேண்டும்.. காங்கிரஸ் மூத்த தலைவர் யோசனை
காங்கிரஸ்

அனைத்து சிறிய மற்றும் பெரிய தேர்தல்களிலும் தங்கள் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த பா.ஜ.க. தொண்டர்கள் இரவும், பகலும் உழைக்கிறார்கள். பா.ஜ.க.வின் தொண்டர்கள் எந்தவொரு தேர்தலிலும் தங்கள் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த எந்தவொரு வாய்ப்பையும் விட்டுவிடவில்லை. அவர்கள் முழு முயற்சியையும் செய்கிறார்கள். நெறிமுறை அல்லது ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். காங்கிரஸ் தொண்டர்கள் வாரத்தின் 7 நாட்கள் இடைவிடாது உழைத்து ஒரு யுக்தியை உருவாக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடன் போட்டியிட முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.