“தமிழகத்தில் பாஜக கால் பதிக்கக் கூடாது; அதிமுக கூட்டணி வெற்றி பெறக் கூடாது”

 

“தமிழகத்தில் பாஜக கால் பதிக்கக் கூடாது; அதிமுக கூட்டணி வெற்றி பெறக் கூடாது”

தமிழகத்தில் பாஜக கால்பதிக்க கூடாது, அதிமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

“தமிழகத்தில் பாஜக கால் பதிக்கக் கூடாது; அதிமுக கூட்டணி வெற்றி பெறக் கூடாது”

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “மதசார்பின்மை வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தீவிரமாக செயல்படுகிறோம் .திமுக உடனான தொகுதி உடன்பாடு மகிழ்ச்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.சமூக நீதிக்கு எதிராக இருக்கும் சக்திகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே இலக்கு. எங்களுக்கு திமுக கூட்டணியில் 25 தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மிகவும் மகிழ்ச்சியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறோம். அரசியலில் ஏற்ற இறக்கங்கள் என்பது இயல்பு . பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் கட்சி மட்டுமே” என்றார்.

“தமிழகத்தில் பாஜக கால் பதிக்கக் கூடாது; அதிமுக கூட்டணி வெற்றி பெறக் கூடாது”

தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் பாஜக கால் பதிக்கக் கூடாது; அதிமுக கூட்டணி வெற்றி பெறக் கூடாது என்ற நோக்கத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம் அரசியலில் ஏற்றம்-இறக்கம் என்பது சகஜம். பாஜகவை வீழ்த்திய பிறகு காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம்” என்றார்.