அனைவருக்கும் தடுப்பூசி வேண்டும் என்பதற்காக பேசுங்க.. பொதுமக்களுக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள்

 

அனைவருக்கும் தடுப்பூசி வேண்டும் என்பதற்காக பேசுங்க.. பொதுமக்களுக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள்

அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதற்காக பேசுங்க என்று பொதுமக்களிடம் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

பிரியங்கா காந்தி டிவிட்டரில், நம் நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்துதல் நிலவரம், மற்றும் தடுப்பூசி ஏற்றுமதி செய்வது தொடர்பான வீடியோவை ஒன்றை பதிவேற்றம் செய்து இருந்தார். மேலும் அனைவருக்கும் தடுப்பூசி வேண்டும் என்று எதற்காக பேச வேண்டும் என்பதற்கான காரணத்தையும் அதில் பதிவு செய்து இருந்தார்.

அனைவருக்கும் தடுப்பூசி வேண்டும் என்பதற்காக பேசுங்க.. பொதுமக்களுக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள்
பிரியங்கா காந்தி

அந்த டிவிட்டில், ஏனெனில் அனைவருக்கும் தடுப்பூசி என்பது பொய் ஆகக்கூடாது. ஏனெனில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதை விட அரசாங்கம் பொதுமக்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். பி.எம். கேர் பெயரில் திரட்டப்பட்ட நிதி எங்கு செலவிடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு.

அனைவருக்கும் தடுப்பூசி வேண்டும் என்பதற்காக பேசுங்க.. பொதுமக்களுக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள்
கொரோனா தடுப்பூசி

ஏனெனில் தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதற்கு பதிலாக அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என பிரியங்கா காந்திபதிவு செய்து இருந்தார். நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் வயது பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.