வாக்குப்பதிவு முடிந்தவுடன் டெஸ்ட்… காங். வேட்பாளருக்கு கொரோனா!

 

வாக்குப்பதிவு முடிந்தவுடன் டெஸ்ட்… காங். வேட்பாளருக்கு கொரோனா!

ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுபவர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செல்வப்பெருந்தகை. தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இவர், சமீபத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி கீழ்ப்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் டெஸ்ட்… காங். வேட்பாளருக்கு கொரோனா!

இதுதொடர்பாகச் செல்வப்பெருந்தகை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘எனக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். மேலும், என்னுடன் தொடர்பில் இருந்த நண்பர்கள், கட்சியினர், உறவினர்கள் கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.