நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு…காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

 

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு…காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கல்லூரி செமெஸ்டர் தேர்வுகள் உட்பட பல தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மாணவர்களின் நலன் கருதி நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என மாணவர்கள் உட்பட பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தேர்வு எந்த காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படாது என தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இதனைத்தொடர்ந்து, நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளும் நேற்று வெளியாகின.

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு…காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

கொரோனாவிற்கு இடையே நடைபெறும் இந்த தேர்வு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் 7 மாநில முதல்வர்கள் ஆலோசனை நடத்தினர். அந்த கூட்டத்தின் முடிவில், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் நீட் தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தொடர முடிவெடுத்தன. இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியினர் நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். மேலும், மத்திய அரசின் அலுவலகங்கள் முன்னர் போராட்டம் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.