மலைகளை இடம் பெயர்த்து நட்ட ஸ்டாலின்… வைரமுத்து வாழ்த்து!
தி.மு.க-வின் புதிய நிர்வாகிகளாகப் பதவியேற்ற துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, ஆ.ராசா ஆகியோருக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து
தெரிவித்துள்ளார். மலைகளையே பெயர்த்து ஸ்டாலின் நட்டுவைத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தி.மு.க பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன், பொருளாளர் அண்ணன் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் அண்ணன் க.பொன்முடி, சகோதரர் ஆ.ராசா நால்வரும் வாழ்த்துக்குரியவர்கள்.
மலர்ச்செடிகளைப்போல நான்கு மலைகளை இடம்பெயர்த்து நட்டிருக்கும்
தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்குரியவர்.— வைரமுத்து (@Vairamuthu) September 9, 2020
கவிஞர் வைரமுத்து இன்று வெளியிட்டுள்ள ட்வீடில், “தி.மு.க பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன், பொருளாளர் அண்ணன் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் அண்ணன் க.பொன்முடி, சகோதரர் ஆ.ராசா நால்வரும் வாழ்த்துக்குரியவர்கள்.
மலர்ச்செடிகளைப்போல நான்கு மலைகளை இடம்பெயர்த்து நட்டிருக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்குரியவர்” என்று கூறியுள்ளார்.