முதல்வர் பழனிசாமி மிலாடி நபி வாழ்த்து!

 

முதல்வர் பழனிசாமி மிலாடி நபி வாழ்த்து!

மிலாடி நபியை கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி மிலாடி நபி வாழ்த்து!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இஸ்லாமியப் பெருமக்களுக்கு மிலாடி நபி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் , ‘இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த நாளை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு நல்வாழ்த்துக்கள். உலகில் அன்பு, அமைதி, சமாதானம், சகோதரத்துவம் தழைக்கட்டும் என வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் பழனிசாமி மிலாடி நபி வாழ்த்து!

கொரோனா காரணமாக பண்டிகை நாட்கள் வழக்கமான உற்சாகமின்றி களையிழந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. மிலாடி நபி நாளை (30-ம் தேதி) கொண்டாடப்படுவதையொட்டி அனைத்து டாஸ்மாக் கடைகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் தமிழகத்தின் அனைத்து டாஸ்மாக் கடைகளும் நாளை மூடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.