விஜயகாந்த் கொரோனாவிலிருந்து மீண்டுவர ஓபிஎஸ் வாழ்த்து!

 

விஜயகாந்த் கொரோனாவிலிருந்து மீண்டுவர  ஓபிஎஸ் வாழ்த்து!

விஜயகாந்த் பூரண குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் கொரோனாவிலிருந்து மீண்டுவர  ஓபிஎஸ் வாழ்த்து!

கொரோனா தொற்றால் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவர் அன்புச் சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைந்து இயல்புநிலை திரும்பிட இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

வழக்கமான உடல் பரிசோதனையின் போது விஜயகாந்திற்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அவருக்கு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது பூரண நலத்துடன் உள்ளதாக தேமுதிக தலைமை கழகம் விளக்கமளித்துள்ளது.