அரசுத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த டி.என்.பி.எஸ்.சி. முடிவு

 

அரசுத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த டி.என்.பி.எஸ்.சி. முடிவு

தமிழக அரசு துறைகளில் பணியாற்றும், பல்வேறு நிலை ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு,.பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் பெறுவதற்கு துறை ரீதியான தேர்வுகளில், அவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, டி.என்.பி.எஸ்.சி.,யால் எழுத்து தேர்வு முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

அரசுத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த டி.என்.பி.எஸ்.சி. முடிவு


இந்நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னை உள்ளதால், வரும் காலங்களில் நடக்க உள்ள துறை தேர்வுகளை, ஆன்லைன் முறையில் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. இதற்கான ஆன்லைன் தேர்வு நடத்தும் நிறுவனங்களை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.