5ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கட்டாயம் : வைரமுத்து வரவேற்பு!

 

5ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கட்டாயம் : வைரமுத்து வரவேற்பு!

5ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு வைரமுத்து வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, இது பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி முறையில், பெருமளவிலான மாற்றத்தக்க சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும்.

5ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கட்டாயம் : வைரமுத்து வரவேற்பு!

21-ஆம் நூற்றாண்டின் இந்த முதலாவது கல்விக் கொள்கை, 34 ஆண்டுகள் பழமையான தேசிய கல்விக் கொள்கை, 1986-க்கு மாற்றாக அமையும் என்று கூறப்படுகிறது. இதில் 3 வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படும், புத்தகங்கள் மட்டுமின்றி செய்முறை விளையாட்டுகள் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படும் என்றும் 5 ஆம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி கற்பிக்கும் முறை இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.


இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில், “ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழியில் கல்வி கட்டாயம் என்று நடுவண் அரசு பொதுவாக வரையறுத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அது அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் சட்டப்படியும் திட்டப்படியும் கட்டாயம் என்ற உறுதிச் சொற்களால் உரைக்கப்பட வேண்டுமென்று கல்வி உலகம் கருதுகிறது.
#தமிழ்” என்று பதிவிட்டுள்ளார்.