தந்தை,மகன் சிறையில் உயிரிழந்த விவகாரத்தில் போலீசை கண்டித்து நாளை முழுக்கடையடைப்பு !

 

தந்தை,மகன் சிறையில் உயிரிழந்த விவகாரத்தில் போலீசை கண்டித்து நாளை முழுக்கடையடைப்பு !

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் வசித்து வந்தவர் ஜெயராஜ். அவரது மகன் பென்னிஸ். இவர்கள் இருவரும் பழைய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே செல்போன் மற்றும் மரக்கடை வைத்திருந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி ஊரடங்கால் கடையை அடைக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். அதனால் போலீசாருக்கும் இவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால், இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்தது.

தந்தை,மகன் சிறையில் உயிரிழந்த விவகாரத்தில் போலீசை கண்டித்து நாளை முழுக்கடையடைப்பு !

இச்சம்பவம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை செய்த மதுரை உயர்நீதிமன்றக்கிளை, தந்தை மகன் உயிரிழந்தது தொடர்பாகத் தூத்துக்குடி எஸ்.பி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் உயிரிழந்தது மக்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ள நிலையில், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் உட்படப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து நெல்லையில் வணிகர்கள் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் போலீசை கண்டித்து நாளை முழுக்கடையடைப்பு நடத்தப்படும் என்று தெரிவித்தார்.