அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது ஆட்சியரிடம் புகார்

 

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது ஆட்சியரிடம் புகார்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி போட்டியிடுகிறார். திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி களமிறங்குகிறார். தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதிகளில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்துவருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இதை அறிந்த திமுகவினர் தேர்தல் அதிகாரிகளுக்கும், வருமானவரித்துறை இருக்கும் புகார் அளித்து வருகின்றனர். கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் பணப்பட்டுவாடா அதிக அளவில் நடப்பதால் அங்கு தேர்தலை நிறுத்த வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது ஆட்சியரிடம் புகார்

இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஆட்சியர் நாகராஜனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் முகாம் இல்லத்தில் ஆட்சியரை நேரில் சந்தித்து திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி புகார் அளித்துள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறி காவல்துறையினரை மிரட்டிய எஸ்.பி. வேலுமணி மீது நடவடிக்கை எடுக்குமாறு கார்த்திகேய சிவசேனாபதி வலியுறுத்தியுள்ளார்.