வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு? – ஏட்டு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு? – ஏட்டு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

ஈரோடு

ஈரோட்டில் தனிப்பிரிவு தலைமை காவலருக்கு சொந்தமான வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு பழையபாளையம் ஓடைமேடு பகுதியை சேர்ந்தவர் வேல்குமார்(48). இவர், ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தொடர் புகார்கள் சென்றன. புகார்களின் அடிப்படையில் வேல்குமாரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு? – ஏட்டு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. திவ்யா தலைமையிலான குழுவினர் நேற்று காலை வேல்குமார் வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள், அசையா சொத்துக்களின் ஆவணங்கள், வங்கி பாஸ்புக், செக்புக் போன்றவற்றை கைப்பற்றி, வேல்குமார் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர்.

இந்த சோதனையின் முடிவில் வேல்குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அங்கிருந்த போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதேபோல், வேல்குமாருக்கு சொந்தமான ஈரோடு முனிசிபல் சத்திரத்தில் உள்ள குடியிருப்பிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.