குழந்தைகளுக்கு எதிரான குற்றம்.. இந்த எண்ணில் புகார் அளிக்கலாம்: காவல்துறை அறிவிப்பு

 

குழந்தைகளுக்கு எதிரான குற்றம்.. இந்த எண்ணில் புகார் அளிக்கலாம்: காவல்துறை அறிவிப்பு

சமீப காலமாக பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. தண்டனையை அதிகரித்தால் தான் இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்க முடியும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர், குழந்தை வீடு திரும்புமா என எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் நிலைமையே தமிழகத்தில் நிலவுகிறது. குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை குறித்து புகார் அளிக்க ஹெல்ப்லைன் நபர்கள் இருக்கின்றன. இருப்பினும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பங்கள் தொடர்கதையாகவே இருக்கிறது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றம்.. இந்த எண்ணில் புகார் அளிக்கலாம்: காவல்துறை அறிவிப்பு

இந்த நிலையில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க காவல்துறை புதிய எண்ணை அறிவித்துள்ளது. 91592 50666 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் நபர்கள் இந்த எண்ணை பயன்படுத்தி தகவல் கொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.